மழைத்துளி

சாலையில் செல்லும் பொழுது சட்டென்று ஒரு மழைத்துளி இமை மீது விழுந்தால், சில்லென்று ஒரு சிலிர்ப்பு தோன்றுமே! அப்படி தோன்றிய சிந்தனைச் சிதறல்களை பதித்து வைக்கும் இடம் இது!

Sunday, April 08, 2007

சி-வா-ஜி சி-வா-ஜி சி-வா-ஜி

சி-வா-ஜி சி-வா-ஜி சி-வா-ஜி

மொத்த தமிழகமே கடந்த ஒரு வாரமாக ஒலி வடிவில் கேட்டு கொண்டிருக்கும் மந்திரச் சொல். பாடல்கள் அனைத்தும் பிராமாதம்.அட்டகாசம்.Top-notch.
தலைவர்-ARR கூட்டணி மீண்டும் சாதித்துள்ளது.
அதெல்லாம் சரி, பாடல்கள் வந்து ஒரு வாரம் என்ன பண்ணிட்டு இருந்தே? அப்டினு நீங்க கேக்குறது புரியுது.வேற ஒண்ணுமில்லை. ஒவ்வொரு பாட்லேயும் மாட்டிக்கிட்டு, முழுசா ரசித்து கேட்டுட்டு வெளியில் வர இவ்ளோ நாள் ஆச்சு.

பல்லேலக்கா:
தலைவர் intro song. SPB voice. கருத்துள்ள வரிகள். its an instant hit. நா.முத்துகுமார் intro song வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி கொண்டுள்ளார்.
அய்யனாரிடம் கத்தி வாங்கி தான் pencil சீவலாமே...
பக்கத்து வீட்டுக்கும் சேத்து சமைக்கிற அன்பு இங்கு வாழும்.

அதிரடிக்காரன்:
another master piece from ARR. அபூர்வமான combination. ஆம். ARR குரல் நம் தலைவருக்கு. listen to this piece from ARR voice -
த-ள-ப-தீ தீ தீ தீ. மழலை :) வாலி has done his job கனகச்சிதமாக.

சஹானா :
வைரமுத்து 'அட' போட வைத்துள்ள பாடல். melody and stand out piece. முதன்முறையாக Udit Narayan இவ்ளோ தெளிவாக பாடியுள்ளது மிக ஆறுதல். மிகமுக்கியமாக வைரமுத்து வரிகளுக்கு.
என் விண்வெளி தலைக்கு மேல் திறந்ததோ?

வாஜி வாஜி வாஜி :
இரண்டாவது பாடலையும் வைரமுத்து நன்றாக எழுதியுள்ளார்.
ஆம்பல் மற்றும் மௌவல். இவை என்ன? இது தான் இப்பொழுது பலரது தலையைக் குடையும் கேள்வி.
இது தான் வைரமுத்து பாடல் எழுதும்போது நமக்கு கிடைக்கும் extras.
ஆம்பல் -> இரவிலே பூத்து பகலிலே குவியும் ஒரு வகை அல்லி பூ.
மௌவல் -> ஒரு வகை காட்டு மல்லி. செந்நிறமாக இருக்கும்.
சிலப்பதிகாரம், பதிற்றுப்பத்து போன்ற இலக்கியங்களில் இவை பற்றி மேலும் அறியலாம். இதைப் பயன்படுத்தியுள்ள விதம் வைரமுத்துவால் மட்டுமே முடியும். this is what called as சொல்லாண்மை.

ஒரு கூடை sunlight:
பா.விஜய் தமிங்கலத்தில் கலக்கியுள்ள பாட்டு.
சிறுசுக்கு உன் style, இளசுக்கு உன் style, பெருசுக்கும் உன் style. :)

THE-BOSS theme song:
இத இத இத தான் எதிர்பார்த்து இவ்ளோ நாள் காத்து கிடந்தோம்.
நன்றி ரஹ்மான். தியேட்டரில் இந்த bit வரும்போது . . . சரி சரி wait பண்ணுவோம்.

ரஹ்மான் has set some high standards with this album.
அவருக்கே இதை தாண்டுவது கடினம்.

சி-வா-ஜி பாடல்கள் -> பொறுத்தார் பூமியாழ்வார்.
we waited and we got it.

இத படிக்க மறந்துடாதீங்க.