வாழிய வாழியவே !
ஒரே நாளில் சமீபத்தில் எனக்கு அதிகமாக அனுப்பப்பட்ட மின்னஞ்சல். (17 முறை)
பல நாட்களுக்கு பிறகு தமிழ்நாடே கொண்டாடிய ஒரு நிகழ்ச்சி.
9/11 பற்றி உலகே பேசிகொண்டு இருக்க, தமிழகம் அதையும் மறந்து வாழ்த்திய ஒரு function.
எடுக்கப்பட்ட சில மணித்துளிகளிலேயே உலகம் முழுதும் flash செய்யப்பட்ட புகைபடங்கள்.
(நன்றி:Sada - நன்றி: Saro)
தமிழ் திரையுலகமே பெருமை பட்டுகொண்ட ஒரு திருமணம்.
அட! அதேதான். நம்ம செல்லப்பிள்ளை சூர்யா, சமத்துப்பெண் ஜோ(திகா) திருமணம் தான்.
முதலில் சில தடங்கல்கள் வந்தாலும், அதை சமாளித்து, பெற்றோர் சம்மதம் பெற்று, இல்லறத்தில் இனிதே இணைந்துள்ள இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பூவெல்லாம் கேட்டு பார்த்து உயிரிலே கலந்தது இந்த காதல். மாயாவியாக வந்த பேரழகன் சூர்யாவை காக்க காக்க என சொல்லி சில்லென்று ஒரு காதல் தந்தார் ஜோதிகா.
உங்களில் பலரை போல நானும் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்த ஒரு திருமணம் இது.
ஒரே வருத்தம் ஜோ இனி சினிமாவில் நடிக்க மாட்டாராம்.
இருவரும் இல்லறம் சிறக்க வாழிய வாழியவே !